
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர்கள் ஆடாம் அட்லி மற்றும் அஷீக் அலி சேதி அலிவி உட்பட, 20 இளம் ஆர்வலர்கள் கெஅடிலான் கட்சியில் இணைந்தனர். இவர்கள் தங்களது உறுப்பினர் பாராங்களை கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் வழங்கினர். டத்தோஸ்ரீ அன்வர் தனது வரவேற்பு உரையில், இலட்சியவாதம் கொண்டவர்கள் மற்றும் போராட்டத்தில் உறுதியாக இருப்பவர்கள் கட்சியில் இணைவது பெருமையளிக்கிறது என்றார்.
