
இன்று முதல் உடற்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. , தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்திருக்கும் மாநிலங்களில் செயல்பட உடல் பயிற்சி மையங்கள் அனுமதியளிக்கப்படுவதாக , இளைஞர் விளையாட்டு துணையமைச்சர் டத்தோஶ்ரீ தீ லியான் கெர் தெரிவித்தார். முழு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அம்மையங்களில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது போன்ற நடப்பில் இருக்கும் SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்
