
மலேசியா வரும் 2030ஆம் ஆண்டில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நாடு எதிர்நோக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் சுமார் 13,000 மருத்துவ நிபுணர்கள்தான் இருந்து வருகின்றனர். ஆனால் மூத்த குடிமக்கள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 28,000 பேருக்கு சிகிச்சை வழங்குவதற்கு போதுமான மருத்துவ நிபுணர்கள் இல்லை என்று அஞ்சப்படுகிறது.
