
தலைநகர், ஜாலான் கெமென்சா ஹைட்சில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 19 வீடுகள் சேதமுற்றதில் 28 பேர் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர், நோராஸாம் காமிஸ் தெரிவித்தார். நேற்று இரவு 9.33 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிக்குத் தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்தனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படுவதைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இதில் யாரும் காயமடையவில்லை என்றார் அவர். தங்களது வீட்டின் பின்புறத்தில் மண் இடிந்த தோடு மரங்களும் சாய்ந்தாக இங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.



