
காஜாங் பெரிய மருத்துவமனைக்குச் சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் திடீர் வருகையளித்தது அதன் ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் கைரியுடன் ஒரு பாதுகாப்பு அதிகாரியும் ஓர் அமைச்சின் அதிகாரியும் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு காஜாங் மருத்துவமனைக்கு வந்தனர். அந்த மருத்துவமனையில் 1 மணி நேரம் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நோயாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். காஜாங் மருத்துவமனையின் நிலைமைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத்தான் அமைச்சர் கைரி வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
