
கிள்ளானிலுள்ள இன்னிசை விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் கைது செய்யப்பட்ட 4 போலீசார் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது தொடர்பில் முழு விசாரணை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர், டத்தோ அர்ஜுனாய்டி முகமட் தெரிவித்தார். இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இவர்கள் தானாகப் பணிமாற்றம் செய்யப்படுவது மட்டுமின்றி இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். Sop விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விட்டது. எனினும், போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது தொடர்பில் மருத்துவ அறிக்கையைப் பெற்றப் பின்னர்தான் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்
