

பெரிஹாத்தின் உதவித் தொகைக்குக் கடந்த ஜூன் மாதம் 15 முதல் 30ஆம் தேதி வரை மேல் முறையீடு செய்தவர்கள் அதற்கான தகுதியை பி.பி.ஆரின் அதிகாரப்பூர்வத் தளத்தில் சரிபார்க்கலாம். இவ்வாண்டுக்கான பெரிஹாத்தின் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துத் தகுதிப் பெறாதவர்களுக்காக மேல் முறையீட்டு விண்ணப்பத்தை உள்நாட்டு வருமான வாரியம் இதற்கு முன் கொண்டிருந்தது. இதில் கூடுதலானப் பிள்ளைகள், திருமணத் தகுதி மாற்றம் மற்றும் வருமான மாற்றத்திற்கு மட்டுமே மேல் முறையீடு செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதிச் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் 18ஆம் தேதி தொடங்கி ‘https://bpr.hasil.gov.my/’ என்ற இணையத் தளத்தில் பொதுமக்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
