
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை விதித்துள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டடிருப்பதோடு பல்வேறு வழக்குகளை இவர் எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சாத்தியத்தை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மறுக்கவில்லை. வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை பொருத்தது என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டியுள்ளார்.
