
சிஜில் பெலஜாரன் மலேசியா எனப்படும் Spm மறுதேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் 8,077 மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 201 தேர்வு மையங்களில் SPM மறுதேர்வு சுமூகமான முறையில் நடமாட்ட கட்டுபாடு விதிகளின் படி நடப்பதை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,568 தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
