
ஜொகூர் மாநிலத்தில் பல காலமாக பாண்டார் பாரு பூலாய் ஜாயா, கங்கார் பூலாய் மாவட்டத்தில் பொது நல சேவையில் ஈடுபட்டு வந்த சமூக சேவகி நீலவாணி காலமானார். சுற்று வட்டார மக்களிடையே மிகவும் அன்பும் அக்கறையும் கொண்ட இவர் ஏழை மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொண்டவர். Covid-19 காலகட்டத்தில் வேலையை இழந்தவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அவர்களுக்கு உணவு பொட்டலமும் அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க உதவியுள்ளார். இனம் மத வேறுபாடு பார்க்காமல் உதவும் நல்லுள்ளம் கொண்ட இவர் நேற்று அகால மரணமடைந்தார். பண்டார் பாரு கங்கார் பூலாய் ஜெயா ஜசெக மகளிர் பிரிவு விவகார செயலாளராகவும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
