
தேசிய முன்னணிக்கு 30 ஆண்டுகளாக முழு விசுவாசமாக இருக்கும் ஐபிஎப் கட்சிக்கு வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கட்சி தலைமை செயலாளர் மோகன் வலியுறுத்தினார். வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மக்கள் சக்தி கட்சிக்கு தொகுதி வழங்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருப்பது வரவேற்கக் கூடியது. அதேசமயம் ஜபிஎப் கட்சிக்கும் தேசிய முன்னணி தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தேசிய முன்னணியில் இடம்பெற்றிருக்கும் இதர கட்சிகளின் தொகுதிகளை நாங்கள் கேட்கவில்லை. தேசிய முன்னணியில் இருந்து வெளியேறிவிட்ட கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
