
அண்மையில் கெடா குருணில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்திற்கு கடவுளை குறை கூற வேண்டாம் என்று எரிசக்தி இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியூடினை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார். இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கெடா வில் வெள்ளம் ஏற்பட்டதற்கு கடவுளின் செயல் என்று அமைச்சர் தக்கியூடின் கூறியபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இடைமறித்து இது இயற்கையின் பெரிடர். கடவுள் மீது குறை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது கடவுளின் செயல் என்பது எப்படி உங்களுக்கு தெரியும். பேராசை கொண்ட மனிதர்கள் இயற்கை எழில் வளத்தை நாச படுத்துவதால் இதுபோன்ற வெள்ளப் பேரிடர் ஏற்படுவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டபோது நாடாளுமன்றத்தில் அனல் பறந்தது.
