
தேசிய நிலையிலான மகிழ்வுமிகு செயல்வழிக் கற்றலில் ( National Level Project Based Learning Eureka Innovation Competition ) புத்தாக்கப் போட்டியில் பங்கேற்ற பேரா கிரியான் மாவட்டத்திலுள்ள கோலக்குராவ் செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இவ்வருடம் மலாக்கா மலாய் பெண் மாணவியர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் தர்சன் த/பெ பூவரசன்,அரியரசன் த/பெ கதிரேசன்,சரண்யா த/பெ டிலிப் குமார் ஆகியோர் கணிதப் பாடத்தில் புதிய கற்றல் முறையை கண்டுபிடித்து பிரிவு 3 குழுப்பிரிவில் வெற்றி பெற்றனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களான இவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர் மு.பார்த்திபன் ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளியின் மேலாளர் வாரியம்,பள்ளியின் தலைமையாசிரியர் தமாரியம்மா மற்றும் பெற்றோர்கள் தங்களின் பாராட்டினை தெரிவித்துக் கொண்டனர்.
