
புத்ரா ஜெயா ஸ்ரீ பெர்டானாவிலிருந்து தளவாடங்களை டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கொண்டுச் சென்றதாக முன்னாள் பிரதமர், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டினார். அந்த 6ஆவதுப் பிரதமரின் வீட்டிலிருந்து மெழுகுவர்த்திகள் உட்பட தளவாடங்கள் கொண்டுச் செல்லப்பட்டன. அந்த ஸ்ரீ பெர்டானா வீட்டிலிருந்து நாட்டின் 6ஆவதுப் பிரதமரான நஜீப் மற்றும் 8ஆவதுப் பிரதமரான நானும் காலி செய்தப் பிறகு இந்த புகார்தான் எனக்குப் பிரதமர் துறையிலிருந்து கிடைத்தது. அந்த வீட்டில் சீரமைப்புகளை மேற்கொள்ளும் அளவுக்கு நான் உள்ளே நுழையவில்லை. அதனால் அந்த தளவாடப் பொருட்கள் போதுமானதா இல்லையா என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.



