
Lankah Melaka எனப்படும் மலாக்கா மாநில ஆட்சி கவிழ்ப்பு க்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்துள்ளது. இது மலாக்கா மாநில மந்திரி பெசார் மீது அதிருப்தி அடைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை ஆகும். மொத்தத்தில் இது மாநில ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசல் ஆகும். மலாக்கா மாநில மந்திரி பெசார் சுலைமான் முகமட் அலி அரசாங்கம் இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கும் முயற்சியில் பக்கத்தான் ஹரப்பான் ஈடுபட்டது இல்லை. கடந்த இரண்டு வாரங்களாக இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்போது முற்றி வெடித்துள்ளது என்று பக்கத்தான் ஹரப்பான் குறிப்பிட்டுள்ளது.
