
வரும் பொதுத் தேர்தலில் அம்னோ தனது பாரம்பரிய தொகுதிகளில் மீண்டும் போட்டியிடும். அதேசமயம் பெர்சத்து கட்சியுடன் இணைந்து அம்னோ பணியாற்றாது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். 2020 அம்னோ பேராளர் மாநாட்டில் பெர்சத்துவுடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு அம்னோ கட்டுப்படும். அதேசமயம் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவர் சொன்னார்.
