
2022 பட்ஜெட்டில் மக்கள் நலனுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் சற்று தணிந்து வருகிறது. மக்கள் மத்தியில் இப்போது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து Sop விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே 2022 பட்ஜெட்டில் மக்கள் பயனடையும் வகையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பக்கத்ததான் ஹரப்பானுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நல்ல பலனைத் தந்து இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
