
தடுப்பூசி மையத்தில் 12 வயது சிறுவனுக்கு காலி தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் சுகாதார அமைச்சு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. சிறுவனுக்கு பெண் சுகாதார ஊழியர் ஒருவர் காலி தடுப்பூசி செலுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தவறுக்காக சிறுவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி தெரிவித்தார். பின்னர் அந்த சிறுவனுக்கு முறையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
