
நீரழிவு நோயின் காரணமாக லெட்சுமி தனது வலது காலை இழந்துள்ளார். இவருக்கு உதவும் வகையில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் இன்று சக்கர நாற்காலியை அன்பளிப்பு செய்தார். இவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தினகரன் தெரிவித்தார்.



