
பெந்தொங் காராக் கம்போங் பாருவில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் 48 வீடுகள் மற்றும் 8 கடைகள் முற்றாக அழிந்தன. நேற்று இரவு இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்று தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
