
வரும் திங்கட்கிழமை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று தேசிய தடுப்பூசி பணிக்குழு அறிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அருகில் உள்ள அரசாங்க கிளினிக் அல்லது மாவட்ட மருத்துவ அலுவலகங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் தேதியை தவறவிட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி மையங்களுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
