
வரும் பொதுத் தேர்தலில் யார் பக்கம் என்பதை சரவா GPS கட்சி முடிவு செய்யட்டும் என்று பெர்சத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். சரவாக் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூரிடம் இதுபற்றி நாங்கள் விவாதிப்போம். வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எந்த அணி பக்கம் இருப்பது என்பதை சரவா ஜிபிஎஸ் முடிவு செய்து கொள்ளட்டும் என்றார் அவர். GPS கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கும்படி முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூரை அவர் கேட்டுக் கொண்டார்.
