
வரும் பொதுத் தேர்தலில் அம்னோ கட்சியை நேரடியாக சந்திப்பதற்கு பெர்சத்து தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்தார். பெர்சத்துவுடன் ஒத்துழைக்க மறுத்தால் அம்னோவை எதிர்த்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர். அம்னோ எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைக்க மறுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார் அவர். பெர்சத்து கட்சியுடன் இணைந்து அம்னோ செயல் படாது என்று அன அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் நேற்று குறிபாபிட்டார்.
