
பதின்ம வயது சிறுவன் ஒருவனுக்குக் காலி தடுப்பூசியைச் செலுத்தியச் சுகாதாரப் பணியாளர் ஒருவர் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாக சுகாதாரத் துணை அமைச்சர், டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கஸாலி தெரிவித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வயதுக் குறைந்த சிறார்களுக்குத் தடுப்பூசிச் செலுத்தும் போது உடன் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் இருப்பதை அனுமதிக்க அமைச்சு முடிவெடுத்துள்ளது. இதை அமைச்சு மிகவும் கடுமையான ஒன்றாக அரசு கருதுவதால் தடுப்பூசிச் செலுத்தும் நடவடிக்கையைப் பாதுகாப்பாக மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை அமைச்சு எடுக்கும் என்றார்.
