
வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் க போட்டியிட, மக்கள் சக்தி கட்சிக்கு தொகுதி வழங்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்ததில் மஇகா கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். எங்களுக்கு எந்த பிரச்சனை இல்லை. தேர்தல் காலத்தில் இந்த பற்றி விவாதிக்கலாம். தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளுடன் எந்த மோதலும் இல்லை. அந்த அடிப்படையில், மக்கள் சக்திக்கான இடங்களை அறிவிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மஇகா பொறாமை கொள்ளவில்லை, எந்தக் கட்சியும் போட்டியிடுவதைத் தடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
