
அம்னோ உச்சமன்றத்தின் முடிவுக்கேற்ப 15ஆவதுப் பொதுத்தேர்தலில் பெர்சத்துவை எதிர்த்து போட்டியிட சபா அம்னோ தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலில் வென்ற அனைத்துத் தொகுதிகளையும் சபா அம்னோ தற்காக்கும் என்று அதன் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர், டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் வென்ற அனைத்துத் தொகுதிகளையும் தொடர்ந்து தற்காக்கக் கட்சி உயர்மட்டத் தலைமத்துவத்தின் முடிவை மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சபாவில் நமக்கு ஜி.ஆர்.எஸ். கட்சி உள்ளது. பொதுத்தேர்தலில் நாம் பெர்சத்துவை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அம்னோவுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறினார்
