
இளம் பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனாவை இனத்துவேஷமாக முகநூலில் திட்டிய Borhan che Rahim என்பவருக்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். கிளாந்தான் பாசிர் மாஸ் பெர்சத்து கட்டசியின் உதவி தலைவரான அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அவர் சொன்னார்.
