
கடந்த வாரம் இறுதியில் பெந்தொங் காராக் கம்போங் பாருவில் நிகழ்ந்த மோசமான தீ விபத்தில் 48 வீடுகள் மற்றும் 8 கடைகள் முற்றாக அழிந்தன. கம்போங் பாருவில் நிகழ்ந்த இந்த. துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ், ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு சூல்பூரி, கெத்தாரி சட்டமன்ற உறுப்பினர் யாங் செபூரா ஒத்மான் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜசெக தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. மேலும், இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு ஜசெக நிதி திரட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீவிபத்தில் வீடுகளை பறிகொடுத்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர்

