
நாட்டில் நேற்று வரை 2 கோடியே 5 லட்சத்து 13 ஆயிரத்து 168 பேருக்கு இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று , சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 2 கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 548 பேர் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான 1 லட்சத்து 8 ஆயிரத்து 826 இளையோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.
