
ஆடம்பர அடுக்குமாடியிலிருந்து விழுந்து நில சொத்துடைமையாளர் ஒருவர் மரணமடைந்தார். இந்த துயரச் சம்பவம் இன்று காலை ஜோர்ஜ்டவுன் கெலாவாயில் நிகழ்ந்தது. சம்பவம் நிகழ்ந்த அவர் இறந்ததாக தீமோர் லாவுட் மாவட்டப் போலீஸ் தலைவர் துணை கமிஷினர் சோபியான் சந்தோங் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர்,மரணமடைந்த நபர் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவர் என அவர் மேலும் கூறினார்.
