
சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட 10,000 சுற்றுலா பற்றுச் சீட்டுகள் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் விநியோகிக்கப்படும். இம்மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை பயன்படுத்தக் கூடிய 100 வெள்ளி மதிப்பிலான அந்த பற்றுச் சீட்டுகளை மின் வணிகத் தளமான ஷோப்பியில் பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
