
மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதை முன்னிட்டு இன்னும் 60 நாட்களில் மாநில தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர், இக்மால்ருடின் இஷாக் வலியுறுத்தினார். மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் 4ஆம் பிரிவு, 19ஆவது விதியின்படி இம்மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 60 நாள் காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனால் இந்த பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து விவாதிப்பதற்குச் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஆணையம் நடத்தும். அதற்கானத் தேதியை ஆணையம் பின்னர் அறிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
