
அரசாங்கத்தின் கடன் தொகை இவ்வாண்டு ஆகஸ்ட் மாத இறுதி வரை 96 ஆயிரத்து 350 கோடி வெற்றியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.3 விழுக்காடாகும் என்று 1ஆவது துணை நிதி அமைச்சர், முகமட் ஷாஹார் அப்துல்லா தெரிவித்தார். இத்தொகையை மக்களுக்கு உதவி செய்வதற்காக அரசு கடனாகப் பெற்ற போதிலும் அது கட்டுப்பாடான நிலையில்தான் உள்ளது. மேலும் 12ஆவது மலேசியத் திட்டத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
