
மலாக்காவின் சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கு அரங்கேறிய அரசியல் நடவடிக்கை மலேசியர்கள் கண்டிக்க வேண்டும் என்று மூடா கட்சித் தலைமைச் செயலாளர், அமிரா ஆய்ஷா வலியுறுத்தி இருக்கிறார். முதல்வர், டத்தோஸ்ரீ உத்தாமா சுலைமான் மாட் அலிக்கான ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவு கோவிட் தொற்றால் நீண்ட காலமாக பலியாகிக் கொண்டிருக்கும் மக்களின் சமூகநலனைப் புறக்கணிக்கும் வகையில் உள்ளது. இந்த அணுகுமுறை உண்மையில் வருத்தமளிக்கிறது. இது அம்னோ மற்றும் பெரிக்காத்தான் கட்சிகளுக்குமிடையே ஏற்பட்ட அரசியல் அதிகாரத்தின் விளைவாகும் என்றார்.
