
மலாக்கா முதல்வர், டத்தோஸ்ரீ உத்தாமா சுலைமான் தலைமையிலான மாநில இடைக்கால அரசுக்கானச் சட்டப்பூர்வத்தன்மையை நிர்ணயிக்க நீதிமன்ற அணுகுமுறையை பக்கத்தான் ஹரப்பான் கையாளும் என்று அதன் மாநிலத் தலைவர், ஹாஜி அட்லி ஸாஹாரி தெரிவித்தார். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதில் பெரும்பான்மையானச் சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை சுலைமான மாட் அலி இழந்து விட்டதால் தற்காலிக அரசுக்கு அவர் தலைமையேற்பதை மலாக்கா பக்காத்தான் விரும்பவில்லை. இந்த மக்கள் நலன் காக்கும் அரசில் சுலைமானை முதல்வராக இருக்க அனுமதிப்பது நியாயமற்றதாகவே கருதப்படுகிறது. அதனால் கடந்தாண்டு மார்ச் 2ஆம் தேதி நிகழ்ந்ததை போல் புதிய முதல்வர் நியமிக்கப்படும் வரை அப்பணியை மாநில அரசுச் செயலாளரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்தது என்றார் அவர்.
