
உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் தாயாருக்கும் தனித்து வாழும் மகளுக்கும் பாரிட் புந்தார் தொகுதி தொகுதி அமானா கட்சியின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன. இங்கு தாமான் ஸ்ரீ செமாராக்கில் வசித்து வரும் சுகன்யா த/பெ அய்யாசாமி ( வயது 67 ) என்ற தாயாருக்கு சக்கர நாற்காலியும் தனித்து வாழும் இவரது மகள் 39 வயது புவனேஸ்வரி த/பெ முனியாண்டி என்பவருக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டதாக பாரிட் புந்தார் நாடாளுமன்ற சேவை மையத்தின் இந்தியர் பிரதிநிதி ரவி தெரிவித்தார். பாரிட் புந்தார் நாடாளுமன்றத்திலுள்ள இந்தியர்களை ஒருபோதும் மறந்து விடாது அவர்களுக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ முஜாஹிட் யூசோப் ராவா கல்வி,பொருளாதாரம்,அடிப்படை தேவைகளுக்கான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
