
ஜொகூர் பத்து பஹாட் பாரிட் ராஜா என்ற இடத்தில் தோல்வி கண்ட அரசாங்கம் என்ற பேனரை ஏற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் அறிவித்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஒன்று கூடிய மாட் ரெம்பிட் இளைஞர்கள் இந்த பேனரை ஏற்றினர்.
பின்னர் பலவித வண்ண பட்டாசுகளை கொளுத்தினர்.இந்த காட்சிகள் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியிருப்பதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏபிசி இஸ்மாயில் தெரிவித்தார்.



