
துன் மகாதீர் முகமது SOP விதிமுறைகளை மீறியதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
தன்மீது எடுக்கப்படும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி கருத்துரைத்த முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் விதிமுறையை மீதியதை துன் மகாதீர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதை பாராட்டுகிறேன்.
நானும் ஒரு கடையில் சாப்பிட சென்றபோது sop விதிமுறையை மீறியதை ஒப்புக் கொண்டு 3,000 வெள்ளி அபராதம் செலுத்தினேன்.
எஸ்ஒபி விதிமுறைய மீறியதை ஒப்புக் கொண்டிருக்கும் நாங்கள் இருவரும் ஒரு கேங் என்று நஜிப் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நாங்கள் இருவரும் இரட்டை வேடம் போடாமல் தவற்றை ஒப்புக் கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
