
நாட்டில் மலாய்க்காரர் அரசியலை மேம்படுத்திக் கொண்டு நிலையாக கொள்ள வேண்டுமானால் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்துடன் அம்னோ இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி செயல்பட முடியாமல் போனால் மலாக்கா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலைதான் மற்ற மாநிலங்களிலும் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்படுமென பேரா மாநில பாஸ் தலைவர் ரஸ்மான் சக்காரியா கூறினார். இன்று மாநிலங்களின் அரசியலில் எந்தவொரு கட்சியும் உண்மையான ஆதிக்கத்தை செலுத்தாததால் மலாக்கா போன்ற ஏற்பட்டு ஜோகூர் மற்றும் கெடா மாநிலங்களிலும் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்படலாம். ஆகையால் இன்றைய அரசியல் நிலவரங்களை அம்னோ நன்கு உணர்ந்துக் கொள்ள வேண்டுமென அவர் சொன்னார்.



