
பேரா மாநிலத்தில் கோவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பால் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனை பெரும் ஆபத்து மற்றும் சிரமமான கட்டத்தில் இருப்பதாக வெளிவரும் தகவலில் எந்தவொரு உண்மையும் இல்லை.மருத்துவமனை இன்னும் கட்டுப்பாட்டு நிலையில் தான் உள்ளது எனவும்,அதன் சேவைகளும் வழக்கம் போலவே நடைபெற்று வருவதாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அப்துல் மாலிக் ஒஸ்மான் தெரிவித்தார்.
ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக் குறித்து புலனத்தின் வாயிலாக பொறுப்பற்ற நபர்கள் வெளியிட்டு வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாமென பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.இருப்பினும் பொதுமக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப எஸ்ஓபியை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
