
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் வேலை வாய்ப்புச் சந்தை வரும் 23 ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 25,000 வேலை வாய்ப்புகள் வழங்கும என்று ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
ஷா ஆலம், கோல சிலாங்கூர், கோல குபு பாரு, உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சுமார் 200 நிறுவனங்கள் பங்கேற்கும் என்று அவர் தெரிவித்தார்.
