
சொகுசு காரைப் பயன்படுத்தி 3 தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட காட் அவனை போலீசார் கைது செய்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. ஸைனால் முகமட் முகமட் தெரிவித்தார். காஜாங்கிலுள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இவன் கைது செய்யப்பட்டான். இதன் மூலம் கோம்பாக், காஜாங், செராஸ் சுற்றுப் பகுதிகளில் நிகழ்ந்த 6 கொள்ளைச் சம்பவத்திற்குத் தீர்வுக் காணப்பட்டு விட்டது. வர்த்தகத் தலங்கள், ஹோட்டல்களில் உள்ளவர்களிடம், கத்தி மற்றும் ரோத்தானைப் பயன்படுத்திக் கொள்ளையிட்டு டொயோட்டா வெல்ஃபயர் காரில் தப்பிச் செல்வதாகும் என்று அவர் சொன்னார்.



