
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், புத்ராஜெயா, சிலாங்கூர், மலாக்கா ஆகியவை வரும் திங்கள்கிழமை முதல் 4ஆம் மீட்சிக் கட்டத்திற்குச் செல்வதாகப் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதே நாளில் கிளாந்தான், பேரா, பினாங்கு, சபா கெடா ஆகியவை 3ஆம் கட்டத்திற்குச் செல்கின்றன. இந்த விவகாரம் குறித்துத் தமது தலைமையில் நடைபெற்ற கோவிட் தொற்று நிர்வாகச் சிறப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.



