
அண்மையில் காராக் கம்போங் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கடைகள் உட்பட பல வீடுகள் முற்றாக அழிந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பகாங் மாநில ஜசெக நிதியைத் திரட்டியது. அந்த வகையில் திரட்டப்பட்ட 4 லட்சத்து 24,000 வெள்ளி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தெரிவித்தார். ஜசெக அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.



