
தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் மின் கட்டண சலுகையை 9.44 மில்லியன் பயனீட்டாளர்கள் அனுபவித்து வரும் நிலையில், அதை இவ்வாண்டு டிசம்பர் 31-க்குப் பின்னும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த விவகாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் பட்டுள்ளது என்றும் இதுகுறித்த முடிவு அரசின் நிதி நிலையைப் பொறுத்து அமையும் என்றும் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். மத்தியக் கூட்டரசின் நிதி நிலைமை அனுமதித்தால், இந்தக் கட்டண சலுகை மேலும் நீட்டிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
