
கோவிட்-19 தடுப்பூசியைப் பெற மறுக்கும் வணிகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான முக்கிய நிபந்தனையாக தடுப்பூசி விளங்குவதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நோ ஓமார் கூறினார். தடுப்பூசி பெறாத பட்சத்தில் அவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். இது அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும் என்றார் அவர்.



