
ஜொகூர் மாநில பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தனது தொகுதியில் உள்ள வசதி குறைந்த 150 மாணவர்களுக்கு மணிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை வழங்கி பேரு உதவி புரிந்துள்ளார். இணையம் வழி கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்கள் கல்வியில் பின் தங்கி விடாமல் இருக்க இந்த மணிக்கணினிகளை வழங்கி இருப்பதாக அவர். தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு போதுமான அளவில் மடிக்கணினிகள் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் சார்பில் மணிக்கணினிகள் வழங்கும் விவகாரத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டது பெரும் வேதனை அளிக்கிறது என்றார் அவர்.
