
பினாங்கு மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வேலை இழந்தோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக்காட்டினார். கடந்த இரண்டு மாதங்களாக வேலை இழந்தோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. தொழில் துறை உட்பட பல துறைகளில் வேலைகள் உருவாகி இருப்பதால் ஏராளமானோருக்கு வேலை கிடைத்திருக்கிறது. மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில்தான் அதிகமானோருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகள் கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.



