27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

வேலையாட்கள் பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் அவதி!

பினாங்கு மாநிலத்தில் நாசி காண்டார் உணவகங்களில் வேலை செய்ய பணியாளர்கள் பற்றாக்குறையால் 200 உணவக உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாநிலங்களைக் கடக்கலாம் என அண்மையில் அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவனிப்பதற்கு,மற்ற வேலைகளை செய்வதற்கும் வேலையாட்கள் இல்லாத குறை ஏற்பட்டுள்ளதாக மலேசிய இந்திய முஸ்லீம் சமூக இயக்கத்தின் தலைவர் முகமட் ரிஷ்வான் அப்துல் கபூர் தெரிவித்தார். அன்னியத் தொழிலாளர்களும் நாட்டிற்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் உள்ளனர். கோவிட் -19 சம்பவத்திற்கு முன்பு பினாங்கு மாநிலத்தில் 40,000 உணவகப் பணியாளர்கள் இருந்தனர்.அது இப்போது 20,000 குறைந்துள்ளது. இதனால் உணவாக உரிமையாளர்கள் பல்வேறு அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles