
செப்டம்பர் 5 ஆம் தேதி மலாக்கா அலோர் காஜா தாமான் செபாங் முத்தியாரா காடேக் என்ற இடத்தில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் 24 முதல் முதல் 36 வயதுக்கு உட்பட்ட ஆறு இந்தியர்களை போலீசார் தேடி வருவதாக மாநில போலீஸ் தலைவர் அஸ்லான் அபு தெரிவித்தார். கடந்த மாதம் ஒப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார் என்றார் அவர்.
